லண்டனில் “தொலைபேசி திருடனால் ரயிலில் இருந்து இழுத்து தள்ளப்பட்ட பெண் – பிளாட்பாரத்தில் சரிந்த அதிர்ச்சி

லண்டனில் “தொலைபேசி திருடனால் ரயிலில் இருந்து இழுத்து தள்ளப்பட்ட பெண் – பிளாட்பாரத்தில் சரிந்த அதிர்ச்சி

கடந்த மாதம்  Waltham Cross ல் ரயிலில் இருந்து இழுத்து தள்ளப்பட்டு தாக்கப்பட்ட பெண் தொடர்பான வழக்கில் காவல்துறை பொதுமக்களிடம் தகவல்களை கோரியுள்ளது. ஏப்ரல் 19 சனிக்கிழமை அன்று, ஸ்ட்ராட்ஃபோர்டு நிலையத்திலிருந்து வந்த கிரேட்டர் ஆங்கிலியா ரயில் சேவையில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் கைப்பேசியை ஒரு நபர் திருட முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் இரவு சுமார் 10.50 மணியளவில் நடந்துள்ளது. கைப்பேசியை கொடுக்க மறுத்த பெண், வால்தம் கிராஸ் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின் அவர் தரையில் விழுந்துள்ளார்.

பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை (BTP) வெளியிட்டுள்ள CCTV படத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டிய இளம் கறுப்பின ஆண் ஒருவரின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர் கொள்ளை விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை வைத்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

சந்தேக நபர், கருப்பு பாலக்லாவா, கருப்பு நைகி ஹூடி மற்றும் கருப்பு பஃபர் ஜாக்கெட் அணிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எவருக்கேனும் தகவல்கள் இருந்தால், பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.