அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 50 வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த ஊழல் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், விரைவில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் பல உயர் அதிகாரிகள் உட்பட அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
Posted insri lanka
ஊழல் வலை! அரசாங்க அதிகாரிகள் 50 பேர் சிக்குகின்றனர்! குற்றப்பத்திரிகை விரைவில்!
