வெப்ப அலைக்கு அதிகளவில் பலியாகும் பெண்கள் – தப்பிப்பது எப்படி?

வெப்ப அலைக்கு அதிகளவில் பலியாகும் பெண்கள் – தப்பிப்பது எப்படி?

அண்மை காலமாக இங்கிலாந்து உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

புவி வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலைகள் மேலும் உக்கிரமடைந்து நம்மை வாட்டி எடுப்பதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் மருத்துவர்களால் “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் இப்போது மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. வெப்பத்தைப் பற்றி நாம் எவ்வளவு கவலைப்பட வேண்டும்? காலநிலை மாறும்போது எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது மிக முக்கியமானது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் மோசமான வெப்பமான வானிலை காரணமாக இறக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சராசரி ஆண்டு இறப்பு எண்ணிக்கை போர்கள் அல்லது பயங்கரவாதத்தால் ஏற்படும் மரணங்களை விட அதிகம். இருந்தபோதிலும், வெப்பம் ஒரு மரணத்திற்கான காரணமாக அரிதாகவே பட்டியலிடப்படுகிறது. ஏனெனில் தீவிர வெப்பநிலை பெரும்பாலும் மறைமுகமான கொலையாளியாகவே உள்ளது. பெரும்பாலும் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வெப்பமான காலநிலையில் மோசமடையும் இருதய, நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற நோய்களால் இளம் வயதிலேயே இறக்கின்றனர்.

வெப்ப அலைகள் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?
அதிக வெப்பம் மனித உடலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பகல் நேரங்கள் மிக வெப்பமாக இருக்கும்போதும், இரவுகள் உடலைக் குளிர்விக்க போதுமானதாக இல்லாதபோதும், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிக வெப்ப அலைகள் அதிக விபத்துக்கள், காற்று மாசுபாடு, பெரிய காட்டுத்தீ மற்றும் அடிக்கடி மின்வெட்டு போன்றவற்றிக்கு வழிவகுக்கின்றன. இவை அனைத்தும் சுகாதார அமைப்புகளின் சுமையையும் அதிகரிக்கும்.

தீவிர வெப்பத்தால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
குறிப்பாக திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், வீடற்றவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதில் வயதானவர்கள், குறிப்பாக அடிப்படை நோய்கள் உள்ளவர்கள், வெப்பம் தொடர்பான பெரும்பாலான இறப்புகளுக்கு காரணமாகின்றனர். ஆண்களை விட பெண்கள் வெப்பம் தொடர்பான காரணங்களால் அதிகமாக உயிரிழக்க வாய்ப்புள்ளது.
எப்பொழுதும் அதீத வெப்பத்தின் தாக்கம் இருக்கும் சஹாரா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா போன்ற வெப்பமான பகுதிகளில் வெப்பநிலை உயரும்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க, புதைபடிவ எரிபொருள் மாசுபாட்டைக் குறைப்பது மிக அவசியம். அத்துடன், வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதும் முக்கியம்.

நகர வடிவமைப்பாளர்கள், நகரங்களை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, குறைந்த கான்கிரீட் மற்றும் குறைவான வாகனங்கள், அதிக பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகள் கொண்ட நகரங்களை உருவாக்க வேண்டும். இது, நகரங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட வெப்பமாக மாற்றும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவைக் (urban heat island effect) குறைக்க உதவும்.

குளிர்சாதன வசதி கொண்ட கட்டிடங்கள் அல்லது இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் வடிவமைப்பு (passive cooling) கொண்ட கட்டிடங்கள் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க உதவும். மேலும், வலுவான சுகாதார அமைப்புகள் மற்றும் விரைவான அவசரகால எச்சரிக்கை அமைப்புகள் உயிரிழப்பை தடுக்கம்.

வெப்ப அலையின்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வெப்ப அலையின்போது பாதுகாப்பாக இருக்க சில எளிய ஆலோசனைகள்:
• வெப்பத்தைத் தவிர்ப்பது: பகல் நேரத்தின் வெப்பமான பகுதிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். கட்டாயமாக வெளியே செல்ல நேர்ந்தால், நிழலில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
• வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல்: பகல் நேரத்தில் ஜன்னல்களை மூடி வைக்கவும். வெளிப்புற வெப்பநிலை உட்புற வெப்பநிலையை விட குறையும்போது, அதாவது இருட்டிய பிறகு, ஜன்னல்களைத் திறக்கவும். நேரடி சூரிய ஒளியைத் தடுக்க ஜன்னல்களைத் திரைகள் அல்லது திரைச்சீலைகள் கொண்டு மூடவும்.
• நீண்ட ஆடைகள் மற்றும் தண்ணீர்: அடிக்கடி தண்ணீர் அருந்தவும். தளர்வான ஆடைகளை அணியவும்.
• பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்தல்: உங்கள் சமூகத்தில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள் அல்லது உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.