Ukrainian military struck 448th missile brigade of russia: அதிரடி தாக்குதல்: ரஷ்யாவின் 448வது ஏவுகணை படை தளத்தை அழித்தது உக்ரைன் !

Ukrainian military struck 448th missile brigade of russia: அதிரடி தாக்குதல்: ரஷ்யாவின் 448வது ஏவுகணை படை தளத்தை அழித்தது உக்ரைன் !

உக்ரைனில் உள்ள சுமி தாக்குதலுக்கு பதிலடி! ரஷ்ய ஏவுகணைப் படைத்தளம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியதில், வெடித்துச் சிதறிய ஆயுதக் கிடங்கு. உக்ரைன் படைகள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சற்று முன்னர்(16) உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சுமி நகரில் 35 உயிர்களை பலி கொண்ட ரஷ்யாவின் கோரத் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவின் 448வது ஏவுகணைப் படைத்தளத்தை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.

டெலிகிராம் செயலி மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் 448வது ஏவுகணைப் படைத்தளம் தாக்கப்பட்டுள்ளது. அங்கு வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியது பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலின் விளைவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சுமி நகரில் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு தெருவில் சிதறிக் கிடந்த உடல்களின் காணொளிகளை வெளியிட்டிருந்தார். “குற்றவாளிகள் மட்டுமே இப்படி நடந்து கொள்ள முடியும்” என்று ஆவேசமாக கூறிய அவர், உலக நாடுகள் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்த குழந்தைகளில் இந்த ஆண்டு பிறந்த பச்சிளம் பெண் குழந்தையும் அடங்குவதாக தெரிவித்துள்ளது. “பிறந்த குழந்தைகள் கூட ரஷ்யாவின் குற்றங்களுக்கு இலக்காகிறார்கள்” என்று அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று ஒடேசாவில் ஜெலென்ஸ்கியை சந்தித்த நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கு நேட்டோவின் “அசைக்க முடியாத” ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். “உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டில், தங்கள் வீடுகளில் உண்மையான அமைதி, உண்மையான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை பெற தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன்” என்று அவர் கூறினார். மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நடத்தும் அமைதி பேச்சுக்கள் குறித்தும் ஜெலென்ஸ்கியுடன் விவாதித்ததாக ரூட்டே தெரிவித்தார்.